search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர் கோவில்"

    • மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார்
    • பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்

    சிவசேனா தேர்தல் பிரச்சார பாடலில் இருந்து 'இந்து தர்மா' மற்றும் 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதற்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடந்த வாரம், கட்சியின் பிரச்சார பாடலாக 'மஷல் கீத்' பாடலை வெளியிட்டோம். அதில் 'இந்து தர்மம்', 'ஜெய் பவானி' என்ற இரண்டு வார்த்தைகளுக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்தது. பாடலில் 'ஜெய் பவானி, ஜெய் சிவாஜி' என்ற முழக்கம் உள்ளது, இது மகாராஷ்டிரா மற்றும் மராத்தியின் பெருமை.

    மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு, மகாராஷ்டிராவின் குலதெய்வமான துல்ஜா பவானி தேவி மீது இவ்வளவு வெறுப்பு இருப்பதாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்று 'ஜெய் பவானி'யை நீக்கச் சொல்கிறார்கள், நாளை 'ஜெய் சிவாஜி'யை நீக்கச் சொல்வார்கள். இதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், "நரேந்திர மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்.

    இந்த இரண்டு பேச்சுகளையும் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதி விளக்கம் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எனவே தேர்தல் ஆணையம் இப்போது எங்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், அந்த ஆணையம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தவ் தாக்கரே பதில் அளித்துள்ளார். 

    • கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    • ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுசெயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்முதல் இதுவரை 1½ கோடி பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ராமபிரானை தரிசித்துள்ளனர். கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    கோவில் கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல் தளத்தில் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.

    கோவிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டி முடிக்கப்படும். கோவில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழாவின் 9-வது நாளான இன்று ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
    • சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

    சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

    இந்த அபூர்வ நிகழ்வை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
    • இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

    ராம நவமியை முன்னிட்டு அயோத்தியா ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது.

    கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.

    ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்...

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
    • சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9- வது நாளான நாளை (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடக்கிறது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.

    இந்த அபூர்வ நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராம நவமி விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

    • 33 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது.
    • கோவில் கட்டுமான பணிக்காக நந்தியாலா அடுத்த அல்லகட்டா பகுதியில் பாறைகளில் இருந்து தூண்கள் மற்றும் சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பத்ராசலம் ராமர் கோவில் தேவஸ்தானம் சார்பில் அமெரிக்கா, அட்லாண்டா அருகே உள்ள கம்மிங் பகுதியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது.

    பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் 33 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் அங்கு ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    கோவில் கட்டுமான பணிக்காக நந்தியாலா அடுத்த அல்லகட்டா பகுதியில் பாறைகளில் இருந்து தூண்கள் மற்றும் சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் சீதா, ராமர் சிலைகள் சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, அர்ஜென்டைனா, கலிபோர்னியா, ஐஸ்லாந்து, ஜப்பான், அலாஸ்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

    அதன் பின்னர் கோவிலில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை பத்ராசலம் ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் பத்மநாபாச்சாரி தெரிவித்துள்ளார்.

    • கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது.
    • ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது. அதே பாணியை பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க முடிவு செய்த காங்கிரஸ் கடந்த டிசம்பர் மாதம் கள ஆய்வு மேற்கொண்டது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு கள ஆய்வை காங்கிரஸ் மேற்கொண்டது. அந்த ஆய்வில் காங்கிரசுக்கு அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது.

    அதாவது ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சில முடிவுகள், திட்டங்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் காங்கிரஸ் நடத்திய ஆய்வின் படி, 10 பேரில் 4 பேர் பா.ஜனதாவுக்கும், 3 பேர் காங்கிரசுக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 3 பேர் வேட்பாளர் யார்?, அவரது சாதியை பார்த்து வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளனர்.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியதையும், எவ்வளவு மக்கள் பயன்அடைந்துள்ளனர் என்பது பற்றி ஒவ்வொரு வாக்காளர்களிடமும் கொண்டு சேர்க்கவும் தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    • 8,350 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்.
    • கடவுளின் பணியும், தேசத்தின் பணியும் மிக வேகமாக நடந்து வரும் நேரம்.

    குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள தாராப் என்ற இடத்தில் வாலிநாத் மகாதேவ் கோவிலை திறந்து வைத்து பிரார்த்தனை செய்த பின்னர் பொது நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

    இதற்கிடையே, 8,350 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

    அயோத்தியில் இன்று, ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு, நாடு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, எதிர்மறையாக வாழும் மக்கள் வெறுப்பின் பாதையை விட்டு வெளியேறவில்லை.

    கடவுளின் பணியும், தேசத்தின் பணியும் மிக வேகமாக நடந்து வரும் நேரம்.

    நாட்டில் ஒருபுறம் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மறுபுறம் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர்.

    கோவை:

    கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வள்ளி கும்மி நடனம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே ஆடிய இந்த நடனத்தை இப்போது பெண்களும் ஆர்வமுடன் கற்று வருகிறார்கள்.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த நடனத்தை கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பெண்கள், சிறுமிகள் என ஏராளமா னோர் உற்சாகத்துடன் கற்று அரங்கேற்றம் செய்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக கோவில் விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் வள்ளி கும்மி நடனம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வள்ளி கும்மி நடனம் ஆடுவது கவருவதாக அமைந்துள்ளது. வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மங்கை வள்ளி கும்மி நடனக்குழுவினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கோவில் முன்பு தங்கள் பாரம்பரிய வள்ளி கும்மி நடனத்தை அரங்கேற்றி அங்கு திரண்டு இருந்த வடமாநில பக்தர்களை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர். ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் தாங்களும் இந்த கலையை கற்க விரும்புவதாக பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி மங்கை வள்ளிக்கும்மி குழுவின் தலைமை பயிற்சியாளரான பொங்கலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 477 பேருடன் ரெயில் மூலம் அயோத்தி சென்றோம். அயோத்தி ராமபிரான் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றப்பட்டது. இதனை உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் வெகுவாக கண்டு ரசித்தனர். நடனம் நிறைவு பெற்றதும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர், எங்களுக்கும் வள்ளி கும்மி கற்றுத் தாருங்கள் என்று மனம் திறந்து கேட்டனர். வள்ளிக்கும்மிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

    பண்டைய காலம் முதலே கும்மி ஆட்டம் என்பது அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வருகிறது. இந்த ஆட்டத்துக்கு கும்மி கொட்டுதல், அதாவது கை கொட்டுதல் என்று பொருள். இது தற்போது காலமாற்றத்துக்கு ஏற்ப மெல்ல நடந்து அடித்தல், நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிர்ந்து அடித்தல், குதித்துக் குதித்து அடித்தல், கைக்கொட்டி அடித்தல், இணையுடன் சேர்ந்து கைகளை கொட்டுதல் என்று 6 நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது.


    கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் மாரியம்மன், முருகன் கோவில் திருவிழாக்களின்போது முளைப்பாரி எடுத்து கும்மி அடிப்பது வழக்கத்தில் உள்ளது. அதாவது முளைப்பாரி வளர்க்கும் வீட்டின் முன்பாக 6 நாளும், கோவிலில் ஒரு நாளும் கும்மியடித்து ஆடுவோம். அப்போது பல்வேறு கருத்துக்கள் செறிந்த பாடலைப் பாடி கும்மியடித்து ஊர் மக்கள் முன்னிலையில் பண்டைய கால பழக்கவழக்கங்களை நினைவு கூறுவோம்.

    எங்களின் வள்ளி கும்மி குழுவில் பெரும்பாலும் நாட்டுப் புறப்பாடல்களும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் பாடப்படுவது உண்டு. அகநானூறு, சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும் பூந்தட்டு, குலவை, தீபம், கதிர், முளைப்பாரி என கும்மியில் பல்வேறு வகைகள் உண்டு. இதற்கான இலக்கியங்களும் சாத்திரங்களில் நடைமுறையில் உள்ளன. அவற்றில் வைகுந்தா் கும்மி, வள்ளியம்மன் கும்மி, பஞ்சபாண்டவா் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபசே கும்மி போன்ற இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை.

    கும்மி என்பது உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வு அளிக்கும் சிறந்த கலை ஆகும். வள்ளி கும்மி ஆட்டத்தில் ஈடுபடுவோருக்கு மருந்து, மாத்திரை இன்றி உடலில் நீரிழிவு, அதிக ரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் குறைந்து உடல்நிலை இயல்புநிலைக்கு திரும்புகிறது. உடல் ஆரோக்கியமும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

    வள்ளி கும்மியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. முழு நிகழ்ச்சி நடத்த 2.5 மணி நேரம் ஆகும். கேரளாவில் செண்டை மேளம் உள்ளிட்ட பழங்கால கலையை வளர்க்கும் வகையில் அதனை சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி த்தொகை வழங்குகிறது. மேலும் பயிற்சி பெற விரும்புவோருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல தமிழக அரசும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
    • காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அயோத்தி:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இடையில் 2 மணி நேரம் நடை அடைக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கோவில் நடை அடைப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, தினமும் ஒரு மணிநேரம் மட்டும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இவ்வாறு தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறினார்.

    • அழைப்பு வரவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.
    • லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    டெல்லி முதல்மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு மனைவி மற்றும் குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் செல்கிறார்.

    அயோத்தி ராமர்கோவிலில் கடந்தமாதம் நடந்த கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து அதிக அளவிலான மக்கள் அங்கு சென்று வருகிறார்கள். கடந்த 22 -ந்தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.

     


    மேலும் அவர் குடும்பத்துடன் அயோத்தி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட விரும்புவதாகவும் கூறி இருந்தார். கும்பாபிஷேக விழாவுக்கு பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர். 

    கட்சி பேதங்களைக் கடந்து ஏராளமான தலைவர்களும் கூட ராமர்கோவிலுக்கு செல்கிறார்கள். உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ராமர் கோவிலுக்கு சென்றார்.

    எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கோவிலுக்கு செல்லும் பயணத்தை இன்று புறக்கணித்தனர். பா.ஜ.க., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஓ.பி. ராஜ்பார் தலைமையிலான எஸ்.பி.எஸ்.பி., ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் அயோத்தி சென்றனர்.

    • ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா?
    • தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?.

    பாராளுமன்றத்தில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பகவான் ராமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், நாதுராம் கோட்சேவை வெறுக்கிறேன். ஏனென்றால், அவரால் கொல்லப்பட்ட நபர் கூறிய கடைசி வார்த்தை ஹேம் ராம்.

    இன்று நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். மோடி தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதா?. ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா? இந்த அரசு சொந்த மதத்தை கொண்டுள்ளதா?. இந்த அரசு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. இந்த நாடு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் நிற்காது, நிற்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்.

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடந்த நிகழ்வு குறித்த இந்தத் தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?. நாட்டிலுள்ள 17 கோடி முஸ்லிம்களுக்கு இதைவிட இந்த அரசு தெரிவிக்கும் பெரிய செய்தி என்ன?" என்றார்.

    மேலும், முஸ்லிம் தலைவர்களின் படையெடுப்பு மற்றும் ஆட்சிக்குப் பிறகு, சிறுபான்மையினர் பிரிவில் இருந்து வந்த தலைவர்கள் என பா.ஜனதாவால் முத்திரை குத்தப்பட்டு வரும் நிலையில் "நான் என்ன பாபர், ஜின்னா அல்லது அவுரங்கசீப்பின் செய்தி தொட்பாளரா?" என கடுமையாக தாக்கி பதில் அளித்தார்.

    ×